• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி! பொது மக்கள் சாலை மறியல்..,

ByV. Ramachandran

Jul 26, 2025

தென்காசி அருகே குட்டையில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி முறையாக வேலி அமைக்கப்படாததே இறந்ததற்கு காரணம் என தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் இறந்தவர் உடலையும் வாங்க மாட்டோம் என சொல்கிறார் என தகவல்.

தென்காசி வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்கின்ற தவில் கலைஞர் பாவூர்சத்திரம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அங்குள்ள பயன்பாடு இல்லாத பாதுகாப்பற்ற கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி அவரது உறவினர்கள் தென்காசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.