• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பிட்டிங் கார் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..,

ByS.Ariyanayagam

Feb 3, 2026

திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு சம்பந்தமாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் இவர் காரை பார்த்திபன் என்பவரிடம் ரூ.70 ஆயிரத்திற்கு அடமான வைத்திருந்தார்.

அது பல கட்டமாக திண்டுக்கல்லை சேர்ந்த ரவுடி கும்பலை சேர்ந்த ஹாரிஸ் முகமது என்பவரிடம் அடமானமாக வந்துள்ளது. காரின் உரிமையாளர் முத்துக்குமார் பணத்தை கொடுத்து காரை திருப்பி கேட்டதற்கு காரை திருப்பி தர முடியாது மீறி கேட்டால் காரை கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டியதாக காரின் உரிமையாளர் புகார் தெரிவித்தார். இதுகுறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் பார்த்திபன், யாசின் ஹாரிஸ் முகமது அல்-ஆசிக் ஆகிய 4 கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ராஜாமுகமது மகன் தாரிக்அன்வர்(26) என்பவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான தனிப்படையினர் கேரளா சென்று தாரிக்அன்வரை கைது செய்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி சிறையில் அடைத்தனர்.