மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது. கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி நாளை முதல் 20வரை முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச, நேர்த்திக்கடன் செலுத்த கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்