தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக, டிச.12ஆம் தேதிக்குள் சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் டிச.12க்குள் பதிலளிக்க சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.