நற்றிணைப் பாடல் 86:
அறவர், வாழி தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே!
பாடியவர்: நக்கீரர்
திணை: பாலை
பொருள்:
தலைவன் தலைவி பற்றிய வாழ்க்கை அகப்பொருள். அகப்பொருள் வாழ்க்கைநெறியில் தலைவன் தலைவியருக்குத் துணை புரிவோர் வாயில்கள். இந்த வாயிகளில் ஒருவர் அறவர். தலைவன் பொருள் தேடும் வினை முடிந்து வந்துகொண்டிருக்கிறான் என்னும் செய்தியை அறவர் தலைவிக்குச் சொல்கிறார். அதனைக் கேட்ட தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள். அறவர் வாழ்க! தோழி! அறவர் சொன்னதைக் கேட்பாயாக. வேண்டிய பொருளைத் திரட்டிக்கொண்டு இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று சொன்ன காதலர் அவ்வாறே காலம் தவறாமல் வந்துகொண்டிருக்கிறார்.
கடும்பனி அற்சிரம் ஸ்ரீ கடும்பனி பொழியும் முன்பனிக் காலம்.
பகன்றைப் பூ மலரும் காலம். பகன்றை பாண்டில் என்னும் கூட்டுவண்டி போல் மலரும் காலம். பாண்டில் என்னும் வட்டி போல் மலரும் எனக் கூறுவாரும் உளர். பகன்றை வேல் போல் விரிந்து கதுப்பின் (கன்னம்) தோல் போல் காணப்படும்.
கோங்கம் மலரும் காலம். கைத்திறம் மிக்க கலைஞன் (வினைவன்) தைத்துத் தந்த சுரிதகம் போல் மலரும் கடும்பனி அற்சிரக் காலம். (சுரிதகம் ஸ்ரீ தலைமுடிப் பின்னலில் திருகி வைத்துக்கொள்ளும் மணி பதித்த பொன்னணி | கலிப்பாவில் கருத்துக்களை முடித்துவைக்கும் முடிப்புரை சுரிதகம் எனப்படுதல் காண்க)
ஈங்கை மலர் பூக்கும் தளிர் அசைந்தாடும் அற்சிரக் காலம். இப்படிப்பட்ட இளவேனில் காலத்தில் நம் நினைவோடு திரும்பி வருகிறார்.
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]