ஆறுகளை பாதுகாக்கும்பொறுட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் நடைபெற்ற மாரத்தான்போட்டியை அமைச்சர் ,தமிழக காவல்துறை தலைவர் துவக்கி வைத்தனர்.
ஆறுகளை காப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்து வகையில்.கன்னியாகுமரி,நாகர்கோவிலில் மாரத்தான்போட்டி நடைபெற்றது. 28கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் போட்டியை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுதறை அமைச்சர் சுப்பரமணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ்,தமிழக காவல்துறை தலைர் சைலேந்திர பாபு ஆகியோர் துவக்கி வைத்து பங்கேற்றனர்.மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.