நத்தம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பிரிவு பகுதியில் மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாத்தாம்பாடியை சேர்ந்த சித்திரையன் என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கார் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.






