குலாலர் இனத்தைச் சார்ந்த மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைத்து, அரசு விழாவாக கொண்டாட குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை.
மதுரையில் குலாலர் சாலிவாகனன் மக்கள் இயக்கம் சார்பில், மாநில கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஓராண்டு நிறைவு பெற்று சாதனை படைத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சிறந்த ஆட்சிக்கு குலாலர் சாலிவாகனன் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கும் தீர்மானமும், 56 தேசங்களை ஆண்ட குலாலர் இனத்தைச் சார்ந்த மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைத்து அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள கிராம கோயிலில் குலாலர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக உள்ளனர். சொந்தச் செலவில் தினசரி பூஜை செய்து வருகிறார்கள் பூஜை பொருள்கள் வாங்க நாளொன்றுக்கு 500 ரூபாய் அரசு சார்பில் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்கள் சுவாமி சிலைகள், பொம்மைகள் செய்யும் தொழிலாளருக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும், தற்போது நல வாரியத்தில் காலியாக உள்ள பொறுப்பிற்கு குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வாரிய தலைவராக நியமித்திட வேண்டும்.
மழைக்கால நிவாரணமாக தற்போது கொடுக்கப்பட்டு வரும் தொகை 5 ஆயிரத்தை பத்தாயிரம் ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் செய்தியாளருடன் கூறியதாவது தமிழகத்தில் குலாலர் சமுதாயம் மண்பானைகள் செய்வதோடு நாட்டு செங்கல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்கள் குறிப்பாக மலை கிராமங்கள் உள்ளவர்கள் மண் எடுப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் குலாலர்கள் மண்ணெடுக்க தடை இல்லை என உத்தரவு பிறப்பித்து முறையான அரசாணை இல்லாததால் மண்ணடுக்க முடியவில்லை எனவே தற்போது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள உத்தரவை அரசாணையாக பிறப்பித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
வனத்துறையினர் 10 கிலோமீட்டர் அப்பால் மண் எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் அரசு தரப்பில் ஒரு கிலோமீட்டருக்கு மேல் மண் எடுக்கலாம் என தெரிவிக்கின்றனர் 10 கிலோமீட்டர் என்பதை ஒரு கிலோ மீட்டராக குறைத்து அரசாணை வெளியிட்டால் மட்டுமே எங்களது குலாலர் சமூகத்தினர் பயன்பெறுவர். இந்த முரண்பாடை அரசாணையாக தெளிவுபடுத்த வேண்டும். அதுபோல உள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம், என்றார்.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]