

பேரழகா..,
வார்த்தைகள்
வசப்படாத போது
உன்னிடம்
யாசிப்பதுண்டு,
கண்ணசைவில்
வந்து விழுந்திடும்
வார்த்தைகள்… கவிதைகளாகவே.
உன் மௌனத்தில்
கவிதை தருகிறாய்…
பேரழகா உன்
இசைவைச் சொல்லி
அந்த நேசத்தையும் தந்தாலென்ன..?
காலமெல்லாம்
எழுத வேண்டும்…
நேசக்
கவிதைகள் என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்

