• Thu. Apr 25th, 2024

பழனி முருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 6 நாட்கள் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி திருவிழாவின் 6-ம் நாளில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு, மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மறுநாள் 7-ம் நாளில் திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, விஸ்வரூப தரிசனம், 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி இதைத்தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள 4 திசைகளிலும் தீபம் ஏற்றப்படும். 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *