• Mon. May 12th, 2025

வாரணாசியில் உள்ள ஸ்வர்வேத மஹா மந்திர் டிரஸ்ட் டின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு

வாரணாசியில் உள்ள ஸ்வர்வேத மஹா மந்திர் டிரஸ்ட் டின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு , கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான அழைப்பு.

காசியில் (வாரணாசி)மில் 100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஸ்வர்வேத மஹா மந்திர் டிரஸ்ட் டின் நூற்றாண்டு விழா எதிர் வரும் டிசம்பர் 6_7, தேதிகளில் காசியில் நடைபெறவுள்ளது இவ்விழாவின் சிறப்பு கொண்டாட்டமாக 2500 எண்ணிக்கையில் ஸ்வர்வேத ஞான மஹாயாகம் நடைபெறவிருக்கிறது.

இந்த சிறப்பு மிக விழாவில் இந்தியாவின் எட்டு திக்குகளில் வாழ்கிற மக்கள் இந்த சிறப்பு மிக்க 25,000 ஞான மஹாயாகம் நிகழ்வில் பங்கேற்று புவி வாழ்க்கையில் ஒரு அற்புதமான காட்சியை கண்டு நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், சம்பந்தப்பட்ட டிரஸ்ட் டின் இன்றைய பொறுப்பாளரான ஸ்ரீ ஸ்ந்த்ப்ரவந்த் விக்யான் தேவ்ஜி மஹராஜ். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான மக்களை அழைக்கும் முதல் கன்னியாகுமரி நிகழ்வில் பங்கேற்று அருள் உறை ஆற்றினார் . இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இது சம்பந்தமாக ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள விழா குழுவினரை அணுகும் படி நிகழ்வில் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பன்றி மலை சுவாமிகள் பங்கேற்றார். ஏராளமான அன்பர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.