ஆண்டிபட்டி பேரூராட்சி வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் தீவிரம். 31 வாக்குச் சாவடிகளுக்கு டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டிபட்டி பேரூராட்சியை ஆறு வார்டுகள் வீதம் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒன்பது மையங்களில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களுக்கு சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளை ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ஆண்டிபட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாக்குப் பெட்டிகள் செல்லும் வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவி அலுவலர்கள் உடன் சென்றனர்.
இதையடுத்து ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 31 வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆண்டிபட்டி பேரூராட்சி தேர்தலுக்காக பிரத்தியேகமாக காவல்துறை வருவாய்துறை அடங்கிய மூன்று பறக்கும்படையினர் ரோந்துசுற்றி முறைகேடுகளை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . மேலும் 26,796 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள ஆண்டிபட்டி உள்ளாட்சி தேர்தலை தேர்தல் அலுவலர் சின்னசாமிபாண்டியன் தலைமையிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர் .

- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]