• Fri. Apr 19th, 2024

மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…

Byகாயத்ரி

May 21, 2022

மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருடன் இவரது கணவர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டார். ஆனால் பீட்டர் முகர்ஜிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில் இந்திராணிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மே 19 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *