உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவை இன்னும் சில மாதங்களில் இந்தியா மிஞ்சி விடும் என ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்குள் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் தகவல்!அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியாவில் 1.4286 பில்லியன் மக்களும்,சீனாவில் 1.4257 பில்லியன் மக்களும் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் 2011ம் ஆண்டிற்கு பிறகு மக்கள்தொகை கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.