செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் செப்.1 முதல் சுங்ககட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி திருச்சி.சமயபுரம்.திருப்பராயத்துறை,கரூர், மணவாசி .தஞ்சை வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. கார்,வேன்.ஜீப்களுக்கு ரூ5 வரையும், டிரக்,பஸ் ,பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ150 வரையும் உயர்கிறது. தமிழகம் முழவதும் உ ள்ள 50 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.