வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் கஞ்சா விற்போர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், கஞ்சாவை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. புதுவை நகர பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்து விட்ட நிலையில் தற்போது கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் அருகே பரிக்கல்பட்டு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோவுக்கும் மேலாக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.