• Tue. May 14th, 2024

சந்தையடியில் புதிய அய்யா வைகுண்டசாமி கோவில் திருப்பணி தொடக்க விழா..,

கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள சந்தையடியில், புதிய அய்யா வைகுண்டசாமி நிழல் தாக்கல் திருப்பணி தொடக்க விழா இன்று(அக்டோபர் 30) நடைபெற்றது.

திருப்பணி குழு தலைவரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய தாங்கலின் திருப்பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் சாமிதோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி, சாமி தோப்பு பையன் ராஜா மற்றும் சந்தையடி பகுதி பொது மக்களும் ஏரளாமாக கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *