• Wed. May 8th, 2024

இராஜபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் துர் நாற்றத்துடன் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி

ByKalamegam Viswanathan

Feb 18, 2024

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் பாதாள சாக்கடை மூலம் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி வருகின்ற நிலையில் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியார் மருத்துவமனை முன்பு பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் துர்நாற்றத்துடன் சாலையில் செல்வதால் புதிய பேருந்து நிலையம் ,செல்லக்கூடிய பேருந்து, கார், போன்ற கனரக வாகனங்கள் செல்வதால் கழிவு நீர் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *