• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கத்தாரில் இந்தியர்களின் மரணதண்டனை சிறைத்தண்டனையாக மாற்றம்..!

Byவிஷா

Dec 29, 2023

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
கத்தாரில் உளவு பார்த்த குற்றத்திற்காக 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து இந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்த வெளியுறவுத் துறை அமைச்சகம் தீர்ப்பு முழுமையாக வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது.