சோழவந்தானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, அதிமுகவினர் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாழ்க, புரட்சித்தலைவி அம்மா வாழ்க, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க, என கோஷங்கள் எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை இராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியன், ராஜா, நிர்வாகிகள் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, நகர இளைஞரணி கேபிள் மணி துரைக்கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, இலக்கிய அணி மணி, ஆசிரியர் ஜெய்பிரகாஷ், தியாகு பத்தாவது வார்டு செயலாளர் மணிகண்டன், தண்டபாணி மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, மேலக்கால் காசிலிங்கம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைக்கழகங்களிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.