• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தென்மண்டல போலீசாருக்கு ஐஜி அன்பு தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்…

ஆண் பெண் காவலர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் துறை சார்ந்த தங்களின் தேவைகள் குறித்துக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதி ஐ.ஜி., அவர்களிடம் வழங்கினார்கள்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தென் காடு நாகர்கோவில் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த காவல் காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம்,
காவல்துறை ஐஜி அன்பு அவர்கள் தலைமையில் இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஆண் பெண் காவலர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் துறை சார்ந்த தங்களின் தேவைகள் குறித்துக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதி ஐ.ஜி., அவர்களிடம் வழங்கினார்கள். இந்தக் குறை தீர்க்கும் முகாமில் 11 மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் காவலர்கள் கலந்து கொண்டனர்.