இலங்கை மீன்வர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ,ஓபிஎஸ் அதிமுக.ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் தனது பெயருக்கு கீழ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் ஓபிஎஸ் க்கு ,இபிஎஸ் எழுதிய கடிதத்தில் ” நீங்கள் ஒருங்கிணைப்பாளரே இல்லை” என்று குறிப்பிட்டிருந்த நிலையில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று மீண்டும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.