சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் எனபரபரப்பு வீடியோ..!!
தெலுங்கு நடிகர் கோட்ட சீனிவாச ராவ். பல படங்களில் நடித்து வந்த அவர், 2003-ல் வெளியான ‘சாமி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்கிற கதாபாத்திரத்தில் பிரபலமானார். தொடர்ந்து சகுனி, கோ, ஏய், ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணசேத்திர நடிகராகவும் சில நேரங்களில் நகைச்சுவை செய்தும் நடித்து வந்தவர். தமிழ், தெலுங்கு என்று சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கடந்த 1990-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், 1999-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆந்திராவின் கிழக்கு விஜயவாடா தொகுதியில் போட்டியிட்டு பதவி வகிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இவர் மறைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளும் பரவி வந்த நிலையில், தற்போது அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ பதிவிட்டு இருக்கிறார். குறிப்பிட்ட இந்த வீடியோவில் பேசியிருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் சமூக வலைதளங்கள் தன்னை கொன்றுவிட்டதாகவும் மக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோருக்கு தக்க பாடத்தை மக்கள்தான் கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டவர், தான் இறந்துவிட்டதாக வெளியாகி இருக்கிற செய்தி துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை கொண்டாடுவதற்கான வேலையில், தான் ஈடுபட்டு இருப்பதாகவும் இது போன்ற சூழலில் இப்படியான வதந்திகள் பரவுவது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும், தன்னுடைய இடத்தில் வேறு எந்த முதியவரேனும் இருந்தால் அவருடைய இதயமே வெடித்திருக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பெயரையும் புகழும் ஈட்டுவதற்கு எக்கச்சக்கமான வழிகள் இருக்கும் பொழுது இது போன்ற வதந்திகளை பரப்பி அதற்கான வேலையை செய்ய வேண்டியது இல்லை என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]