• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில், அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ByN.Ravi

Mar 12, 2024

ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறி வருவதை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழக முழுவதும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் அறிவுறுத்தலின்படி, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக, சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் முன்பு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ,ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, நிர்வாகிகள் அவைத் தலைவர் முனியாண்டி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம். கே. முருகேசன்,
மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி தண்டபாணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு, 7வது வார்டு எஸ் பி மணி, 10வது வார்டு மணி, ஜெயபிரகாஷ், துரைக்கண்ணன், மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கல்லாங்காடு ராமு, இலக்கிய அணி மணி ஆசிரியர், முன்னாள் கவுன்சிலர் பெருமாள், ஜூஸ் கடை கென்னடி, குருவித்துறை விஜய் பாபு, மகளிர் அணி வனிதா வழக்கறிஞர் காசிநாதன், முள்ளிப்பள்ளம் சேது பாண்டியம்மாள், ராமநாதன், மேலக்கால் காசிலிங்கம், மேல மட்டைடயான் ராமு, பேட்டை பாலா பி. ஆர். சி. மகாலிங்கம், மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளைக் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பிறஅணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.