உதகையில் கடந்த இரண்டு நாட்களாக உறைபனி தாக்கம் காணப்படுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர் பனி, உறை பனியின் காலநிலை காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் காந்தல், தலைகுந்தா, குதிரை பந்தைய மைதானம், பகுதிகளில் புல்வெளிகளில் உறப பனி படர்ந்துள்ளது .இதில் படகு இல்லம், நீர்நிலைகள். நீரோடைகளில் உறை பனியின் தாக்கத்தால் நீர் நிலைகளின் மேல் மேகம்போல் பனி காணப்படுகிறது.

வரும் நாட்களில் உறைபனியில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாகவும் இதனால் நாள்தோறும் அதிகாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் குளிர் ஆடைகளைப் போர்த்தியும் தீ மூட்டியும் உறைபனியின் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
மேலும் அதிகாலை வேளை பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உறை பனியின் தாக்கம் அதிகாலை 10 மணிவரை நீடிப்பதால் கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மலை காய்கறிகளும் உறை பனியால் வெகுவாக பாதிப்படையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- மின் பொருள் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல் பெண்ணின் தொடர் தொந்தரவு..,

- ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம்..,

- புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேரவை தொடக்க விழா..,

- உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ..,

- தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு..,

- திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் கொள்ளை..,

- அரசு பள்ளியில் ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர் பவன்குமார்..,

- இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைத்த ராயல் எக்ஸ்போ 2026..,

- மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் விழா தகுந்த பாதுகாப்புடன் நடைபெற இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார்..,

- தவெகவிற்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்..,









