• Sun. May 18th, 2025

தமிழகத்தில் வரும் ஜூலை 30ஆம் தேதி வரை கனமழை தொடரும்…

Byகாயத்ரி

Jul 26, 2022

தமிழகத்தில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என முன்னரே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.