• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி..,

ByS.Ariyanayagam

Nov 14, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான ‘சிறப்பு Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனாமணி, துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, மாவட்ட திறன் அலுவலர் பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.