ஒன்றிய அரசு100 நாள் வேலை திட்டத்தின் நிதியை குறைப்பதும் அதானிக்கு சலுகை அளிப்பதும் இந்த அரசாங்கத்தின் இரண்டு பார்வையாக இருக்கிறது. இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
மதுரை தனக்கன்குளத்தை அடுத்த வேடர் புளியங்குளம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அங்கிருந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில்:
திருப்பரங்குன்றம் ரயில்வே பாதை குறித்த கேள்விக்கு:
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. ரயில் நிற்பதாக இருந்தாலும், ரயில் திட்டங்களாக இருந்தாலும் மோடி அரசு விருதுநகர் தொகுதியை வஞ்சிக்கிறது.

100 நாள் வேலை திட்டம் நிதி குறைப்பு குறித்த கேள்விக்கு:
நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் நிதி மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு சாமானிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். பல கிராம மக்களுக்கு இது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இந்த திட்டத்தின் நிதியை குறைப்பதும் அதானிக்கு சலுகை அளிப்பதும் இந்த அரசாங்கத்தின் இரண்டு பார்வையாக இருக்கிறது. இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இது.
திமுக , காங்கிரஸ் கூட்டணி குறித்து மோடி கூறியதும் மற்றும் மோடியிடம் கேட்ட இந்த கேள்விகள் குறித்த கேள்விக்கு:
பாஜக ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். முதலில் அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். ஐந்து கேள்விகள் என்பது அதானியுடன் மோடி எத்தனை வெளிநாட்டு பயணங்கள் சென்றுள்ளார், எத்தனை இடங்களில் அதானிக்கான ஒப்பந்தங்களை பெற்று தந்தார், மோடி இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு அதானி தனியாக சென்று ஒப்பந்தங்களை பெற்றுள்ளார், கடந்த இரண்டு பொது தேர்தல்களில் பாஜகவிற்கு அதானி எவ்வளவு நிதி கொடுத்துள்ளார் இன்று கேள்வி எழுப்பி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் அதற்கு அவர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
வாரணாசி விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு:
மோடியின் தொகுதியில் இருப்பதால் வாரணாசி விமானநிலையத்திற்கு பல முன்னேற்ற திட்டங்களை மோடி அரசு செய்தது. ஆனால் அங்கு ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது. காழ்ப்புணர்ச்சியோடு மோடி அரசு செயல்படும் என்றால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மாணிக்கம் தாகூர் கூறினார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]