• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

2 வருடங்கள் கழித்து மீண்டும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கம்

2 வருடங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு.

தென்காசி மாவட்டத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு மாநில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் அரசு உத்தரவின்படி இரு மாநில பேருந்துகள் இயக்கப்பட்டது கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை ஆலப்புழா, ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கப்படுகிறது.
இன்று முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைந்த அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் இருமாநில பேருந்துகள் இயக்கப்படுவதால் வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.