• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே இடி தாக்கி ஆடுகள் பலி..,

ByS.Ariyanayagam

Jun 2, 2026

திண்டுக்கல் அருகே இடி தாக்கியதில் ஆடுகள் பலியாயின. திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்தவர் ரெங்கசாமி(47).. இவருக்கு சொந்தமான தோட்டம் பித்தளைபட்டியில் உள்ளது.அந்த தோட்டத்தில் பித்தளைபட்டியை சேர்ந்த மெம்மேலி(53) என்பவர் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளார்.

இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தோட்டத்து பகுதியில் மின்சார வயர்கள் அறுந்து தரையில் விழுந்துள்ளது அப்போது ஆட்டுப்பட்டிக்கு ஆடுகளை ஓட்டி சென்ற போது அறுந்து கிடந்த மின்சார வயரில் மிதித்து ஒரு மாடு, 4 ஆடுகள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.