• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“ஜனநாயக ஆசாத் கட்சி”யை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்..

Byகாயத்ரி

Sep 26, 2022

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard colour) படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையையும், வெள்ளை அமைதியையும், நீலம் நிறம் சுதந்திரம், திறந்தவெளி, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரம் வரை உள்ள வரம்புகளையும் குறிக்கிறது என்றும் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குலாம் நபி ஆசாத் ஆகஸ்ட் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.