• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கஞ்சா வியாபாரி கைது

ByR. Thirukumar

Aug 1, 2024

திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டத்து காளியம்மன் கோயில் அருகே ஒரு இடத்தில், ஒரு நபர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உடனடியாக அங்கு சென்ற பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், தலைமை காவலர் விஜய் ஆனந்த்& காவலர்கள் அங்கு சந்தேகப்படும்படி இருந்த நரேஷ்சேத்தி (27), த/பெ. உமேஷ்சேத்தி, பவுன்சோனி ஒடிசா என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் சுமார் 3 கிலோ எடையுள்ள கஞ்சாவவை விற்பதற்காக வைத்திருந்ததால்அவரை கைது செய்து, வழக்கு பதிந்து, பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.