சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் பொதுமக்கள் கட்டணம் இன்றி இலவசமாகப் பயிற்சி செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவில்..,
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் உபகரணங்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் மொத்தம் 198 மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.