நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வந்த தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன், சிந்தனைசெல்வன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, ராஜா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று பணி புரியும் பெண்கள் தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை, ஆதிதிரவிடர் பள்ளி மாணவர் விடுதி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அரசின் திட்டங்களுக்காக மனு கொடுக்க மரத்தடியில் காத்திருந்தவர்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனார். அப்போது முதியோர் உதவித் தொகை, சாதிச்சான்றிதழ் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் நின்றவர்களுக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து மாலைக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு நின்றவர்களிடம் உறுதி அளித்தனர்
பின்னர் மதியம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுக் கணக்கு குழுவினர் அனைத்து துறை அதிகாரிகளிடம் திட்டப்பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள் குறித்தும், செலவினங்கள் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். கூட்டத்தின் முடிவில் காலையில் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் ஆய்வின் போது நின்ற முதியவர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை மற்றும் சாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர்.
மதியம் 12 மணிக்கு பொதுமக்களிடம் கோரிக்கையை கேட்ட நிலையில் சுமார் 5 மணிநேர காலத்திற்குள் அவர்களுக்கான கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக உத்தரவு ஆணை பிறப்பித்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட நாட்களாக இந்த திட்டங்களை பெறுவதற்கு அலைந்து திரிந்த தங்களுக்கு ஆய்வுக்கு வந்த இடத்தில் தங்களது மனுக்களை பரிசீலனை செய்ய உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியையும் அவர்கள் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துச் சென்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்…சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி […]
- சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து […]
- அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் […]
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]
- வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறைநாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் […]