• Fri. Apr 26th, 2024

ஈரோடு மாவட்ட அதிமுக சார்பாக 5000 பேருக்கு அன்னதானம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஒவ்வொரு வீதியிலும் அதிமுக சார்பாக அன்னதானம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது.இந்த கம்பத்துக்கு நேற்று ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். கோவில் திருவிழாவையொட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.இன்று அந்த பகுதி முழுவதும் உள்ள எல்லை மாரியம்மன் கோயிலின் திருவிழாவையொட்டி பக்தர்கள் காலை காவிரி கரைச்சென்று தீர்த்தம், அக்னி சட்டி, அலகுகுத்தி வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோயில் பண்டிகை முன்னிட்டு ஈரோடு வீரப்பன் சத்திரம் நமது பாரதம் நண்பர்கள், புரட்சித் தென்றல் எம்ஜிஆர் மன்றம், இந்திய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து 38 ஆம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சியை வெகு விமர்சையாக செய்திருந்தனர்.
அன்னதான நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர மாவட்ட கழக செயலாளர் கே வி இராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கே எஸ் தென்னரசு, வீரப்பன் சத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் என் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி கழக செயலாளர் கேசவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அம்மா பேரவை செயலாளர் மற்றும் சின்னக்கண்ணு ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *