• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குமரியில் பெரிய கோவில் கொடியேற்றம்..,

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரிசனம்கோப்பு கிராமத்தில் அமைந்துள்ள ராகவேசுவரர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ராகவேசுவரர் கோயில் உள்ளூர்வாசிகளால் “பெரிய கோவில்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு சித்திரை திருவிழா வருடந்தோறும் வெரு விமர்சையாக நடக்கும்.

இந்தாண்டு, இன்று காலை 7.30 மணி அளவில் திருவிழா கொடியேற்றம் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஸ்ரீ காரியம் முத்துக்கண்ணன், திமுகழக மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, கழக உடன்பிறப்புகள்பிச்சைபிள்ளை,விஜய்,அந்தரபுரம் ஐயப்பன்,அழகை அனிஷ்,லெட்சுமணன்,ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர். எதிர் வரும் (மே_9)ம்தேதி தேரோட்டம் நடைபெறும்.