புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் இந்த வருடமும்ஃபித்ராவை
கூட்டாக வசூல் செய்து ஏழைகளின் வீடுதேடி விநியோகம் செய்தனர்.

மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் ஏழைகளுக்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 5 கிலோ ஃபித்ரா அரிசி கொண்ட பைகளை வழங்கி துவங்கி வைத்தனர்.



