• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 5, 2024

1. துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்.

2. தீயவர்களிடமும் நல்லது இருக்கிறது. ஒழுக்க சீலரிடமும் தவறு இருக்கிறது. இதில் வியப்பதற்கோ, திகைப்பதற்கோ ஏதுமில்லை.

3. அன்பும், சக்தியும் இணைந்தால் தான் உலகைக் காப்பாற்ற முடியும். அவை தனித்தனியே இருந்தால் உலகைக் காப்பாற்ற முடியாது.

4. புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்து விடுவதில்லை.

5. மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தைரியம் தான். அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக் கூடியவை.

6. உலகத்தில் அழகற்றது என்பது எதுவும் இல்லை, எல்லாமே அழகானதுதான். அதைப்பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.

7. குணம், பொறுப்பு, திடநம்பிக்கை, மரியாதை, தைரியம் இருந்தால் போதும், படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒரு மனிதனால் வெற்றி பெற முடியும்.

8. வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச் சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. அவர்கள் சாதாரண வேலையைக் கூட மிகச் சிறந்த முறையில் செய்கின்றனர்.

9. வெற்றியும், சந்தோஷமும் ஒன்றாக இணைந்தே இருக்கும். நீங்கள் விரும்புவதை அடைவது வெற்றியாகும். நீங்கள் அடைந்ததை விரும்புவது சந்தோஷமாகும்.

10. கற்பது என்பது உணவு உண்பது போன்றது. நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. நீங்கள் எவ்வளவு ஜீரணிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.