
சிந்தனைத் துளிகள்
• பணம் என்ற மூன்று எழுத்து ஒற்றை வார்த்தையில் தான்
மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கிறது.
• உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும்
பணத்தை நோக்கிய பயணத்தையே தொடர்கிறான்.
• பிரசவம் முதல் வாழ்ந்து முடித்து பிணமாகும் வரை
பணம் தான் நம்மையெல்லாம் ஆளும் அரசன்.
• செல்வம் மிகுந்த ஒருவனை மதிக்கின்ற இந்த உலகம்..
ஏழை மனிதன் வயிற்றில் மிதிக்கிறது.
• மனிதனின் மனித தன்மை பணத்தில் கரைந்து ஒன்றிப்போய்விட்டது.
மனிதனை தவிர மற்ற உயிர்கள் எல்லாம் பசிக்காக மட்டும் இரைதேடி உண்டு வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
