சிந்தனைத்துளிகள்
உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம்.
1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.
2) உங்களிடம் எல்லாம் இருக்கும்பொழுது உங்களின் நடத்தை.
உங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைவரும் உங்களை கடந்து செல்லும் மேகங்கள் போலத்தான்.எனவே அவர்கள் மீது தேவையற்ற உணர்வுகளை உருவாக்காமல், “மகிழ்ச்சியான நினைவுகளை” மட்டும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.நல்ல எண்ணங்கள் பெருக, பெருக மகிழ்ச்சி உருவாகும்.மகிழ்ச்சியை தேடாதீர்கள். நீங்களே உருவாக்குங்கள்.