• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

எம்புரான் திரைப்படத்தில் பிரச்சனையை தூண்டும் காட்சியை நீக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம்

ByP.Thangapandi

Apr 1, 2025

எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற காட்சியமைப்பு உள்ளதை நீக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். தயாரிப்பாளர் கோபாலன், நடிகர்கள் ப்ரித்திவிராஜ், மோகன்லால் புகைப்படங்களை செருப்பால் அடித்து, கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சமீபத்தில் ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியும், அந்த காட்சியை பதிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரச்சனையை தூண்டும் வண்ணம் உள்ள காட்சியை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன சங்கம் மற்றும் மக்கள் அதிகார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ப்ரித்திவிராஜ், நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் கோபலன் என மூவரின் புகைப்படங்களை செருப்பால் அடித்தும், கிழித்தும் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், கிழிக்கப்பட்ட புகைப்படங்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.