• Fri. Mar 29th, 2024

எல்லோரும் ஓ.பி.எஸ். தலைமையில் அணிவகுப்பார்கள்

ByA.Tamilselvan

Aug 10, 2022

எல்லோரும் ஒபிஎஸ் தலைமையில் அணிவகுப்பார்கள் …ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு நிர்வாகிகள் நம்பிக்கை
சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் இருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களிடம் அந்த பகுதியின் நிலவரங்கள் பற்றி கேட்டறிந்தார். சுமார் 3.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி களிடம் தனித்தனியாகவும் கருத்துக்கள் கேட்டார். கூட்டம் முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களிடம் கேட்டபோது, நிர்வாகிகள் மட்டுமே கட்சி இல்லை. தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என்பதை பார்க்க வேண்டும். எல்லாம் சில நாட்களில் சீராகும். எல்லோரும் ஓ.பி.எஸ். தலைமையில் அணிவகுப்பார்கள் என்றார்கள் நம்பிக்கையுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed