நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் எத்தைப் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்திருக்கும் எத்தை அம்மன் கோவிலில் மஞ்சூர் ஹட்டி மணிக்கல்ஹட்டி கண்டிப்பிக்கை பகுதிகளைச் சேர்ந்த படுகர் இன மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெள்ளைத் துணிகள் அணிந்து காலை முதல் எத்தைஅம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டு வந்தனர் அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
காலை முதலே பேண்ட் வாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான படுகர் இன மக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.