• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..,

ByS.Ariyanayagam

Jan 20, 2026

திண்டுக்கல் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் கே.டி.கே இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101 வது பிறந்த தினம் சமத்துவ பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது .

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.ராஜா மணி தலைமை வகித்தார்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வினோத்குமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆனந்த ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் இப்ராஹிம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தலைவர் ஏ.பி மணிகண்டன் ,ஐமமுக மாநில செயலாளர் தோழர் ஜமால் முகமது, ஏடிசி மாவட்ட தலைவர் ஜி.பாலன், NFIW மாவட்ட செயலாளர் சாந்தி, கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மையக்கலை தோழர் ஆசிரியர் சேரிவாணன், மாநகரத் துணைச் செயலாளர் சுப்பிரமணி நிறைவுறை பி.வெள்ளைச்சாமி பங்கேற்றனர்.

தோழர்கள் எம்.சந்திரசேகரன் செந்தில்குமார் ரெட்டியார்சத்திரம் கே.செந்தில் குமார் நத்தம் தாலுகா குழு உறுப்பினர் குழு உறுப்பினர் ஆரோக்கியதாஸ் மாநகர குழு உறுப்பினர்‌ தோழர் அலெக்ஸ் நிலக்கோட்டை தாலுகா செயலாளர் அல்லி முத்து வடமதுரை ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் கலை இலக்கிய பெருமை என்ற மையக்கிளை திலகவதி ‌ தோழர் சித்தன் NCBH ஐயப்பன் நன்றி கூறினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தோழர் விஸ்வபாலன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாணவர் பெருமன்றம் AITUC மாதர் சங்கம் மற்றும் கட்சித் தோழர்கள் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.