திருச்செங்கோட்டில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2000 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி 2000 மாணவிகள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர் 2000 மாணவிகளும் தலையில் கிறிஸ்மஸ் குல்லா அணிந்து இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி கலந்துகொண்டு கேக் வெட்டி கிறிஸ்மஸ் விழாவை தொடங்கி வைத்தார் கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் சொக்கலிங்கம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேபி சகிலா உள்ளிட்ட பல்வேறு முதல்வர்கள் துறை தலைவர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். அனைத்து மத மாணவிகளும் பங்கேற்ற ஒரு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்பட்டது.