திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது: “மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. இதில், திமுக தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்படும். அதற்கான அறிவிப்பு வெளியாகும். கிருஷ்ணகிரி அணையில் இருந்தும், சாத்தனூர் அணையில் இருந்தும் பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை பாலாற்றுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டம் 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
தமிழக அரசின் திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்றால் திமுகவை ஆதரிக்க வேண்டும். கிணற்றில் உள்ள தண்ணீர் வயலுக்கு சீராக செல்ல வேண்டுமென்றால் வாய்க்கால் அவசியம்.அதைப்போலத்தான் தமிழக அரசின் திட்டம் மக்களுக்கு சென்று சேர திமுக உறுப்பினர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.வாணியம்பாடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் திமுக உறுப்பினர்களை தேர்வு செய்தால் வாணியம்பாடி நகராட்சி சிறப்படையும். இல்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி நகராட்சி புறக்கணிக்கப்படும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் ஜீரணிக்க முடியாது. ஆளும் திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அனைத்து நன்மையும் நடக்கும்” என்றார்.திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் வாணியம்பாடி நகர மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புறக்கணிக்கப்படுவீர்கள் என மிரட்டும் தொனியில் அமைச்சர் துரைமுருகன் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]