திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது: “மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. இதில், திமுக தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்படும். அதற்கான அறிவிப்பு வெளியாகும். கிருஷ்ணகிரி அணையில் இருந்தும், சாத்தனூர் அணையில் இருந்தும் பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை பாலாற்றுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டம் 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
தமிழக அரசின் திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்றால் திமுகவை ஆதரிக்க வேண்டும். கிணற்றில் உள்ள தண்ணீர் வயலுக்கு சீராக செல்ல வேண்டுமென்றால் வாய்க்கால் அவசியம்.அதைப்போலத்தான் தமிழக அரசின் திட்டம் மக்களுக்கு சென்று சேர திமுக உறுப்பினர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.வாணியம்பாடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் திமுக உறுப்பினர்களை தேர்வு செய்தால் வாணியம்பாடி நகராட்சி சிறப்படையும். இல்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி நகராட்சி புறக்கணிக்கப்படும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் ஜீரணிக்க முடியாது. ஆளும் திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அனைத்து நன்மையும் நடக்கும்” என்றார்.திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் வாணியம்பாடி நகர மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புறக்கணிக்கப்படுவீர்கள் என மிரட்டும் தொனியில் அமைச்சர் துரைமுருகன் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]