நற்றிணைப் பாடல் 4:
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?
பாடியவர் அம்மூவனார்
திணை நெய்தல்
துறை தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
பொருள்:
தோழி! கடற்கரையின் அழகிய சிறுகுடியில் வாழும் மீன் பிடிக்கும் பரதவர், நீல நிறப் புன்னை மர நிழலில் தங்குவர். குளிர்கடல் கொந்தளிக்காத நேரத்தில் அழகான ஓட்டைகள் உடைய மீன் வலையை உலர்த்துவர். அவர்களைச் சார்ந்த தலைவனிடம், “ஊரின் அலரை அன்னை அறிந்தால் இன்ப வாழ்வு இனியில்லை” என்று கூறினால் நம்மை அவருடன் அழைத்துச் செல்வார். வெள்ளை உப்பை வாங்கிய வணிகர் வண்டிகளிலேற்றி வரும் வழியில் பசுக்கூட்டங்களை அகற்ற ஓசை எழுப்புவர். மணல் வழியில் வண்டியைச் செலுத்துவர். அவர்களின் சத்தம் கேட்டு வயல்களிலிருக்கும் கருங்கால் வெளை நாரைகள் அஞ்சும். இவ்வாறான கடற்கரையிலுள்ள தம்முடைய ஊருக்கே நம்மை அழைத்துச் செல்வார்.
உள்ளுறை உவமம்:- உப்பு வணிகர் வண்டியை மணலில் செலுத்தி வரும் ஓசையைக் கேட்டு நாரைகள் அஞ்சும் என்றது, தலைவனைச் சார்ந்த பெரியோர்கள் தலைவியினைப் பெண்கேட்டு வரும் மணமுரசொலி கேட்டு, அலர் தூற்றும் பெண்கள் அஞ்சுவர்.
- மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுமதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் […]
- முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க […]
- சமையல் குறிப்புஈசியான சமையல் டிப்ஸ் ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக […]
- அழகு குறிப்புபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு […]
- குறள் 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு […]
- பொதுஅறிவு வினா விடைதூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?விடை: 1953 பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜாராம் மோகன்ராய் […]
- பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்துபூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து […]
- தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்திதேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி […]
- பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் […]
- ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளிதிருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் […]
- வாட்ஸ்ஆப்-ல் இணைய இருக்கும் புது அம்சங்கள்..!!வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் […]
- பாஜவின் கணக்கு..ஓபிஎஸ்ஸிடம் செல்கிறதா அதிமுக…ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக உள்ள அதிமுகவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக […]
- சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் […]
- இபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் ஓபிஎஸ்இபிஎஸ் கோட்டையாக பார்க்கப்படும் கொங்குமண்டலத்தில் ஓபிஎஸ்க்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க முடிவு.சென்னையில் நேற்று நடந்த ஆலோசனைக் […]