பழனி அருகே நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை ,திமுகவின் 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார்என பேசியுள்ளார்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. ஏனெனில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியவர் டி.ஆர்.பாலுதான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படியெனில் டி.ஆர்.பாலுவை முதல்வராக்கி விடுங்கள். தமிழகத்தில் எது நடந்தாலும் திராவிடமாடல் ஆட்சி என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.
வயலில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வேஷ்டி-சட்டையுடன் விவசாயம் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஏமாற்றுவேலை. இந்தியாவில் அதிக பொய் பேசுவதில் நம்பர் 1 முதல்-அமைச்சராக ஸ்டாலின் உள்ளார். தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக நான் தெரிவித்தேன். சில அமைச்சர்கள் தற்போது என்னிடம் தூது விடுகின்றனர்.
எல்லா முடிவுகளும் கோபாலபுரத்தில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்கின்றனர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் 2 வங்கிகளை திவால் செய்துவிட்டு வந்தவர். பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினை முதல் உள்நாட்டு நக்சலைட் பிரச்சினை வரை தலையிட்டு குறைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளியை தமிழக முதல்வர் கட்டி தழுவுகிறார்.
சென்னையில் பட்டப்பகலில் முகத்தை மறைக்காமல் கூலிப்படையினர் கொலை செய்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருகின்றனர். தி.மு.க ஆட்சியின் 2-வது வருட தொடக்கத்தில் மகன், மருமகன் ஆகியோரை தொடர்ந்து 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் புகழ்வது 23-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவை மந்திரிகள் புகழ்வது போல் உள்ளது.
உக்ரைனில் இருந்து தமிழக அரசு மாணவர்களை மீட்க சுவட்டர் கம்பெனிக்கு ரூ.1½ கோடி கொடுத்துள்ளதாக தெரிவித்தது. இதேபோல் டிராவல் ஏஜென்சி கம்பெனிக்கும் பணம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து கச்சத்தீவை தாரை வார்த்ததுடன் மீன்பிடி உரிமையையும் ரத்து செய்தனர். தற்போது கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுக்கிறார்.
தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை முழுவதையும் மத்திய அரசு கொடுத்துவிட்டது. எனவே இப்போதாவது மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]