கன்னியாகுமரி காவல்துறை உட் கோட்ட புதிய டிஎஸ்பியாக எஸ். ஜெயச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சட்ட ஒழுங்கு,மக்கள் பாதுகாப்பை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன், அவர் அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை இன்று தொடங்கினார்.

போலீசாரும் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பதவி ஏற்ற அடுத்த நொடியே கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில்,நாளை ஆடி அமாவாசை தினத்தில் புனித நீராட ஏராளமான மக்கள் வர இருக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.




