திமுக ஆட்சிக்கு வருவதற்காக என்னென்ன பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள் என்பதை பொதுமக்கள் எண்ணி பார்க்கின்றனர் என பழனிசாமி சிவகாசி பிரச்சாரத்தில் கொந்தளித்தார்.
திமுக ஆட்சிக்குவந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்தார்கள். ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையில் நீட் தேர்வைரத்து செய்வோம் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால்அதற்கான முயற்சியை திமுக அரசு எந்த வகையிலும் மேற்கொள்ளவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக அரசு. இப்போது வரை நீட் தேர்வு ரத்து என்னாச்சு என்பதை பொதுமக்கள் கேட்கின்றனர்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் ஒவ்வொறுவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். 5 சவரன்வரை தங்க ஜெயின் அடமானம் வைத்து இருந்தால் அதுவும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று அறிவித்திருந்தார்கள். மாதந்தோறும் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து அண்ணா திமுக வலியுறுத்தியும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் 22 மாநிலங்களில்ள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. ஆனால் தமிழக அரசு பெற்றோலுக்கு மட்டும் மூன்று ரூபாய் குறைத்து விட்டு டீசல் விலையை குறைக்கவில்லை. ஸ்டாலினை நம்பி 48 லட்சம் பேர் 5 சவரன் தள்ளுபடி கடனுக்காக காத்திருந்தனர். ஆனால் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று தற்போது திமுக அரசு கூறி வருகிறது. இதனால் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு தண்டனையாக 35 லட்சம் பேர் 12 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டி வருகின்றனர். இப்போதுதான் திமுக ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 8 மாத ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியிடும் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும். அடுத்து நான் சிவகாசி வரும்போது அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியைத் தான் கேட்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் என்று சொன்னாலே அதிமுகவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அவரது உரையை முடித்தார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]